என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    filephoto
    X
    filephoto

    கந்தர்வகோட்டையில் மருத்துவமுகாம்

    கந்தர்வகோட்டையில் மருத்துவமுகாம் நடை பெற்றது.
    புதுக்கோட்டை:

    கந்தர்வகோட்டை ஒன்றியம் புதுநகர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில ஊனத் தடுப்பு மருத்துவ மறுவாழ்வு முகாம் மாவட்ட தொழுநோய் அலுவலகம் சார்பில் நடைபெற்றது. 

    முகாமிற்கு மருத்துவ பணிகள் துணை இயக்குனர் சிவகாமி தலைமை தாங்கினார்.முகாமில் தொழு நோயினால் ஏற்படும் ஊனத்தை எவ்வாறு தடுப்பது, அதற்கான சிகிச்சை முறைகள், 

    நோயாளிகளை எவ்வாறு கண்டறிவது, அவ்வாறு கண்டறிந்தவர்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கப்படும் சிகிச்சை பற்றி விளக்கமாக எடுத்துக் கூறப்பட்டது. 

    இந்த மருத்துவ முகாமில் புதுநகர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மணிமாறன், மருத்துவர்கள் சசிவர்மன், கீர்த்தனா, மருத்துவம் அல்லாத மேற்பார்வையாளர் மோசஸ், 

    வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சண்முகசுந்தரம், தர்மலிங்கம், நடேசன், இயன்முறை மருத்துவ நிபுணர் சிந்து மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×