search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடைக்கப்பட்ட பீரோவை படத்தில் காணலாம்
    X
    உடைக்கப்பட்ட பீரோவை படத்தில் காணலாம்

    திருத்தணி அருகே மூதாட்டி வீட்டில் ரூ.5 லட்சம்- 20 பவுன் நகை கொள்ளை

    திருத்தணி அருகே மூதாட்டி வீட்டில் ரூ.5 லட்சம், 20 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருத்தணி:

    திருத்தணி அடுத்த பி.சி.எண்.கண்டிகை கிராமத்தில் வசிப்பவர் பங்காரும்மா(64), இவருடைய கணவர் ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

    நேற்றுமாலை பங்காரும்மா வீட்டை பூட்டிக் கொண்டு சென்னையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றார்.

    இந்த நிலையில் இன்று காலை பங்காரும்மாவின் வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அருகில் உள்ள வீட்டில் வசிப்பவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    இதுகுறித்து திருத்தணி போலீசுக்கும், பங்காரும் மாவுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது பீரோவில் இருந்த 20 சவரன் நகை, ரூ.5 லட்சத்து 20 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது.

    பங்காரும்மா வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்று இருப்பதை அறிந்து கொள்ளைகும்பல் கைவரிசை காட்டி உள்ளனர். இதில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்த ஆசாமிகளாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக் கிறார்கள்.

    பங்காரும்மாவின் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்ற நபர்கள் யார்? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

    மேலும் கைரேகை நிபுணர்கள் அங்கு பதிந்து இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு  கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    Next Story
    ×