என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தக்கலையில் ஜமாபந்தி : கலெக்டர் ஆய்வு
Byமாலை மலர்24 May 2022 1:06 PM GMT (Updated: 24 May 2022 1:06 PM GMT)
தக்கலையில் ஜமா பந்தி நிகழ்ச்சியில் வருவாய் தீர்வாயம் சம்பந்தமான நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அரவிந்த் தக்கலை, கல்குளம், கோதநல்லூர், வேலி மலை, முத்தனக் குறிச்சி, சடையமங்கலம், குமாரபுரம், பத்மநாபபுரம் உள்ளிட்ட 9 கிராம கணக்குகளை ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி:
தக்கலையில் ஜமா பந்தி நிகழ்ச்சியில் வருவாய் தீர்வாயம் சம்பந்தமான நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கல்குளம் தாலுகாவிற்கு மாவட்ட கலெக்டர் அரவிந்த் வருகை தந்து தக்கலை, கல்குளம், கோதநல்லூர், வேலி மலை, முத்தனக் குறிச்சி, சடையமங்கலம், குமாரபுரம், பத்மநாபபுரம் உள்ளிட்ட 9 கிராம கணக்குகளை ஆய்வு செய்தார்.
மேலும், பொதுமக்களிடம் இருந்து விதவை பென்சன், முதியோர் உதவித்தொகை, சாலை-குடிநீர் சீரமைப்பு போன்ற கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இதற்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் தக்கலை தாசில்தார் வினோத், தக்கலை கிராம நிர்வாக அதிகாரி மது, முத்தலக்குறிச்சி கிராம நிர்வாக அதிகாரி சுந்தர் ராஜ், பத்மநாபபுரம் கிராம நிர்வாக அதிகாரி கிருஷ்ணன் ஆகிய 9 கிராம நிர்வாக அதிகாரிகளும் வட்ட சார் ஆய்வாளர்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியானது வரும் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X