என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகளுக்கு இடு பொருட்களை ஆலோசனைகுழு உறுப்பினர் மகாகுமார் வழங்கினார்.
    X
    விவசாயிகளுக்கு இடு பொருட்களை ஆலோசனைகுழு உறுப்பினர் மகாகுமார் வழங்கினார்.

    விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தலைஞாயிறு ஒன்றியத்தில் வேளாள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு ஒன்றியத்தில் நான்கு இடங்களில் உழவர் வேளாண்மைத் துறை சார்பாக கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

    முன்னதாக பன்னத்தெரு ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாநில விவசாயிகள் ஆலோசனைக் குழு உறுப்பினரும் தி.மு.க ஒன்றிய செயலாளாருமான மகாகுமார் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் ரெத்தினகுமார் , உதவி விதை அலுவலர்கள் ரவி, ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    இதேபோல வாட்டாகுடி, நாலுவேதபதி, கோவில்பத்து ஊராட்சிகளில் நிகழ்ச்சியில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் தமிழரசி, வேளாண் அலுவலர் நவீன்,ஊராட்சி மன்ற தலைவர்கள் கற்பகம் நீலமேகம், ஞானசுந்தரி , ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மாசிலாமணி, கஸ்தூரி, ரம்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

    இந்த நிகழ்ச்சியில் 800 குடும்பங்களுக்கு தலா 3 தென்னங்கன்றுகள் வீதம் 2400 தென்னங்கன்று களும் 50 சதவீத மானியத்தில் தார்பாய், பிரேயர் உள்ளிட்ட–வைகளும், 75 சதவீத மானியத்தில் உளுந்தும், 90 சதவீத மானியத்தில் பண்ணை கருவிகள் மண்வெட்டி, கடப் பாறை உள்ளிட்ட பொருட்களும் இந்த நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
    Next Story
    ×