என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
சாராயம் விற்றவர் கைது
சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே ரெகுநாதபுரம் காவல் நிலையத்திற்குட்பட்ட அழகன் விடுதியில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தக வல் ெசன்றது. அதன்பேரில் ஆலங்குடி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் அப்பகுதியில் கண்காணித்தனர்.
அப்போது மருதன்கோன்விடுதியை சேர்ந்த மாரிமுத்து (வயது47) சாராயம் விற்றுக் கொண்டிருந்தது தெரியவந்தது. அவரை கைது செய்து, அவரிடமிருந்த 43 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து சாலையில் ஊற்றி அழித்தனர்.
Next Story






