என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அரசர்குலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வைகாசி திருவிழாவை முன்னிட்டு திருத்தேரோட்டம் நடைபெற்றது.

    அறத்தாங்கி தாலுகா அரசர்குலம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் வைகாசிமாதத் திருவிழா நடைபெறுவது வழக்கம். விழாவினையொட்டி தேரோட்டமும் நடைபெற்றது. 

    இந்தாண்டு நடைபெற்ற விழாவில் கடந்த 15ம் தேதி காப்புக் கட்டுதலுடன் நிகழ்ச்சி தொடங்கியது. அன்று முதல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நாளான நேற்று திருத்தேரோட்டம் நடைபெற்றது.

    தேரினை பக்தர்கள், பொதுமக்கள், இளைஞர்கள் ஆகியோர் வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தின்போது, ஸ்ரீ முத்துமாரியம்மன் தேரில் அமர்ந்து கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

    ஆலய வாசலில் உள்ள தேரடியிலிருந்து புறப்பட்ட தேரானது நான்கு வீதிகளை சுற்றி வந்த பின்பு மீண்டும் தேரடியை அடைந்தது. இதில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    Next Story
    ×