search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மோசடி எஸ்.எம்.எஸ்.,கள் வாடிக்கையாளர்களுக்கு பி.எஸ்.என்.எல்., எச்சரிக்கை

    மோசடி எஸ்.எம்.எஸ்.,களிடம் வாடிக்கையாளர்கள் உஷாராக இருக்க வேண்டும்.

    திருப்பூர்:

    பொருளாதார இழப்புக்கு வலை விரிக்கும், மோசடி எஸ்.எம்.எஸ்.,களிடம் உஷாராக இருக்குமாறு வாடிக்கையாளர்களுக்கு, பி.எஸ்.என்.எல்., அறிவுறுத்தியுள்ளது.

    இதுகுறித்து பி.எஸ்.என்.எல்., நிறுவனம் அனுப்பி வரும் குறுஞ்செய்தியில், குறிப்பிட்ட செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு, 'உங்கள் ஆதார் விபரங்களை சரிபார்க்க வேண்டும். குறிப்பிட்ட செயலியை பதிவிறக்கம் செய்து, தகவல்களை அறிந்து கொள்ளலாம் என்பன போன்று வரும் மோசடி எஸ்.எம்.எஸ்.,களிடம் வாடிக்கையாளர்கள் உஷாராக இருக்க வேண்டும்.

    பி.எஸ்.என்.எல்., நிறுவனம் ஒருபோதும் மூன்றாம் நபர் செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு கூறாது. இது போன்ற எஸ்.எம்.எஸ்.,கள், அழைப்புகள் பொருளாதார இழப்பு முடிவை தரலாம் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×