search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண் செவிலியர்கள்
    X
    பெண் செவிலியர்கள்

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்களை தேடி மருத்துவம் பெண் செவிலியர்கள் திரண்டதால் பரபரப்பு

    மக்களை தேடி மருத்துவம் பெண் சுகாதார தன்னார்வலர்கள் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.
    கடலூர்:

    கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடலூர் மாவட்டத்தில் தமிழக முதல்வரின் சிறப்பான திட்டமான மக்களைத் தேடி மருத்துவ பணியில் பகுதி நேர பெண் சுகாதார தன்னார்வலர்களாக சேர்ந்து , கடந்த ஒன்பது மாதங்களாக அனைத்து கிராமத்திலும் தனியாக சென்று கிராம மக்களுக்கு ரத்த அழுத்தம் , நீரிழிவு நோய் மற்றும் தொற்று நோய்களை கண்டறிந்து அவர்களின் இல்லத்திற்கே நேரில் சென்று மருந்து மாத்திரைகளை தங்கு தடையின்றி இதுவரை கொடுத்துக்கொண்டிருக்கிறோம். நோயாளிகளுக்கு எந்நேரமும் அவசரம் கருதி நோய் தடுப்பு பணிகளை செய்துவருகிறோம். தற்போதுவரை நாங்கள் முழுநேரமும் பணியில் ஈடுபட்டு வருகிறோம் . மேலும் கொரோனா தடுப்பூசி முகாமில் கலந்துகொண்டு பணியாற்றி வருகிறோம் .

    மேலும் TN - PHR entry , Vaccine entry களை எங்களது Mobile online- ல் செய்துவருகிறோம் . அதுமட்டுமல்லாமல் மொபைல் ரீசார்ஜ் , பேட்டரி, மருந்து பெட்டகம் எடுத்துசெல்ல வாடகை மற்றும் பெட்ரோல் செலவு , அதற்குண்டான நோட்டுகள் அனைத்தும் எங்கள் சொந்த செலவிலேயே செய்துகொண்டு இருக்கிறோம். ஆனால் எங்களுக்கு ஊதியமாக 4500 ரூபாய் மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. இதர சலுகைகள் ஏதும் இல்லை. அதுவும் காலதாமதமாக வழங்கப்படுகிறது .

    மேலும் கடந்த மாதம் சம்பளம் வழங்கவில்லை. இதனால் மிகவும் நாங்கள் சிரமப்படுகிறோம் . நாங்கள் அனைவரும் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் எங்கள் குடும்ப செலவிற்கு போதியதாக இல்லை . இன்றைய காலகட்டத்தில் உள்ள செலவினங்களை கணக்கிட்டும் , எங்கள் வாழ்வாதார சூழ்நிலையையும் கருதி குறைந்தபட்சமாக கூடுதல் மாத ஊதியம் அளித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    Next Story
    ×