என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    திருக்காமீஸ்வரர் கோவில் தேர் திருவிழா

    வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவில் தேர் திருவிழா வருகிற 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    புதுச்சேரி:

    வில்லியனூரில் பிரசித்தி பெற்ற கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீஸ்வரர் கோவில் உள்ளது.

    இங்கு ஆண்டுதோறும்  வைகாசி மாதம் பிரம்மோற்சவவிழா சிறப்பாக கொண்டா டப்படும். கொரோனா தொற்று காரணமாக 2 ஆண்டாக தேர் திருவிழா நடக்கவில்லை. இந்த ஆண்டு விழா நடத்த அரசு அனுமதியளித்துள்ளது.

    இதையடுத்து பிரம்மோற்சவ தேர் திருவிழா வருகிற 3-ந் தேதி  கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நாள்தோறும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை, சாமி வீதியுலா நடக்கிறது. வருகிற 10-ந் தேதி மாலை 6.30  மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 11-ந் தேதி நடக்கிறது. அன்று காலை 7.15 மணிக்கு  கோவில் முன்பு தேரோட்டம் தொடங்கி மாட வீதிகளின் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைகிறது. விழாவில் கவர்னர் தமிழயிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கிறார்கள். 12-ந் தேதி  நண்பகல் தீர்த்தவாரியும், மாலை தெப்ப உற்சவமும், 13-ந் தேதி முத்து பல்லக்கும் நடக்கிறது. 

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலரும் சிறப்பு  அதிகாரியுமான திருவரசன் மற்றும் சிவாச்சாரியார்கள் செய்து வருகின்றனர். தேரோட்டத்தை முன்னிட்டு தேரை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள்  ஈடுபட்டு வருகின்றனர்.
    Next Story
    ×