search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகூர்-கங்களாஞ்சேரி சாலையில் குடிநீர் வீணாகி செல்கிறது.
    X
    நாகூர்-கங்களாஞ்சேரி சாலையில் குடிநீர் வீணாகி செல்கிறது.

    சாலையில் வீணாகி செல்லும் குடிநீர்

    திருமருகல் அருகே குழாய் உடைப்பால் குடிநீர் சாலையில் வீணாகி செல்கிறது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் அருகே நாகூர்-கங்களாஞ்சேரி சாலை வழியாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் செல்கிறது. இந்த குடிநீர் கடம்பங்குடியிலிருந்து பெருஞ்சாத்தன்குடி, வாழஒக்கூர், ஒக்கூர், வெங்கிடாங்கால், உத்தமசோழபுரம், பூதங்குடி, நரிமணம், சுள்ளாங்கால் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக ஒக்கூர் பெரியார் சிலை அருகில் இரண்டு இடங்களில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் அதிக அளவில் வெளியேறி வாய்க்காலில் ஓடி வீணாகிறது. இந்த குடிநீர் குழாய் உடைப்புகள் இன்னும் சரி செய்யப்படாமல் அப்படியே உள்ளது. கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குடிநீரை பயன்படுத்தும் உத்தமசோழபுரம், பூதங்குடி, நரிமணம், சுள்ளாங்கால் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.

    இதுகுறித்து சம்பந்தப்ப ட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவி த்தும் இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நாகூர் -கங்களாஞ்சேரி மெயின் சாலையில் உடைப்பு ஏற்பட்டுள்ள குடிநீர் குழாய்களை சீரமைக்க கவனம் செலுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×