search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விராலிமலை மேப்பூதகுடியில் மீன்பிடித் திருவிழா நடைபெற்ற போது எடுத்த படம்.
    X
    விராலிமலை மேப்பூதகுடியில் மீன்பிடித் திருவிழா நடைபெற்ற போது எடுத்த படம்.

    மீன்பிடித்திருவிழா

    மீன்பிடித்திருவிழா நடைபெற்றது.

    புதுக்கோட்டை:

    விராலிமலை அருகே மேப்பூதகுடியில் 15 ஆண்டு–களுக்குப் பிறகு பாரம்பரியமிக்க மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.
    விராலிமலை தாலுகா மேப்பூதகுடி கிராமத்தில் பெரியகுளம் உள்ளது. இங்கு கடந்த வருடம் பெய்த பருவமழை காரணமாக குளத்தில் நீர்நிரம்பி இருந்தது. அதனை அப்பகுதி விவசாயிகள் பயன்படுத்தி விவசாயம் செய்து வந்தனர். 

    இந்நிலையில் குளத்தின் நீர் ஆனது தற்போது வற்றி–யதாலும் அறுவடைக் காலம் முடிந்தாலும் மீன்பிடி திருவிழா நடத்துவது என ஊர் பொதுமக்கள் சார்பாக முடிவுசெய்து கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. 

    அதன்படி இன்று காலை மீன்பிடி திருவிழாவானது நடத்தப்பட்டது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மீன்பிடி திருவிழாவானது நடைபெறுவதால் மேப்பூதகுடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் அதிகாலையிலேயே குளத்திற்கு வந்தனர். 

    இதனையடுத்து கிராம முக்கியஸ்தர்கள் வெள்ளை துண்டு வீசியதை தொடர்ந்து குளத்தின் கரையில் தயாராக நின்ற பொதுமக்கள் தாங்கள் கொண்டுவந்த வலை, தூரி, கச்சா உள்ளிட்டவைகளை கொண்டு குளத்தில் மீன்களை பிடிக்க  இறங்கினர். 

    இதில் விரால், அயிரை, கெழுத்தி, வளனகெண்டை, குரவை உள்ளிட்ட மீன்களை கிராமமக்கள் பிடித்துச் சென்றனர்.

    Next Story
    ×