என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
புதுச்சேரியில் 2 பேருக்கு கொரோனா
புதுவையில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் 786 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் புதுவையை சேர்ந்த 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காரைக்கால், ஏனாம், மாகியில் தொற்றால் பாதித்தவர் யாரும் இல்லை. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. 21 பேர் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று 2 பேர் குணமடைந்துள்ளனர். இவர்கள் புதுவை மற்றும் ஏனாமை சேர்ந்தவர்கள்.
புதுவை மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 65 ஆயிரத்து 834 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1 லட்சத்து 63 ஆயிரத்து 851 பேர் குணமடைந்துள்ளனர். 1962 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை 17 லட்சத்து ஆயிரத்து 924 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
Next Story






