search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    சிவகங்கை மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் 5 வாலிபர்கள் சிறையில் அடைப்பு

    சிவகங்கை மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் 5 வாலிபர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்
    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொலை உள்ளிட்ட குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 5 வாலிபர்களை காவல்துறை கண்காணிப்பாளர் பரிந்துரைத்ததின் பேரில் கலெக்டர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.

    மானாமதுரை சிப்காட் காவல் நிலையத்தின் கீழ் புதுக்குளம் அருகே கடந்த மார்ச் மாதம் 27-ந்் தேதி மருதுபாண்டி என்ற இளைஞரை பழிக்கு பழியாக கொலை செய்த வழக்கில் சிவகங்கை அருகே உள்ள வானியங்குடி பகுதியை சேர்ந்த மணிவண்ணன்,   கணித் என்கிற ராஜ்குமார்,  வைரவன்பட்டியை சேர்ந்த பால்பாண்டி, கருப்பு ஆகிய 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். 

    அதேபோல் சாக்கோட்டை காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் சுதந்திராபுரம் பகுதியை சேர்ந்த தேவா என்ற மணிகண்டன் கைது செய்யப்பட்டார். 

    மேற்கண்ட 5 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் பரிந்துரைத்ததின் பேரில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி அதற்கான உத்தரவை பிறப்பித்தார். அதன் அடிப்படையில் வாலிபர்கள் 5 பேரும் மீண்டும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
    Next Story
    ×