search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகங்கையில் 56-ம் ஆண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
    X
    சிவகங்கையில் 56-ம் ஆண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.

    மாட்டுவண்டி பந்தயம்

    சிவகங்கையில் 56-ம் ஆண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே வேலாயுதபட்டினம் கிராமத்தில் உள்ள தர்ம முனீஸ்வரர், குருஞ்சியுடைய அய்யனார், ஒத்ததூண் கருப்பர், காமாட்சி அம்மன், பெரியநாயகி அம்மன் கோவில் 56-ம் ஆண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
     
    25-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் பந்தயத்தில் கலந்துகொண்டன. பெரிய மாடு, சிறிய மாடு என இரு பிரிவுகளாக வேலாயுதபட்டினம்- தேவகோட்டை சாலையில் நடந்த இந்த பந்தயத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட மாடுகள் கலந்து கொண்டன. 

    பெரிய மாட்டிற்கு சென்று வர 8 மைல் தூரம், சிறிய மாட்டிற்கு 6 மைல் தூரம் என பந்தயம் தூரம் நிர்ணயிக்கப்பட்டது. பெரிய மாட்டுவண்டி பந்தயத்தில் முதலாவதாக சிவகங்கை மாவட்டம் வெளிமுத்தி வாஹினியும்,2-வதாக பெரியவீரை பாஸ்கரனும், 3-வதாக கல்லல் உடையப்பா சக்திஅம்பலமும், 4-வதாக சிவகங்கை அருண் ஸ்டுடியோ, வெட்டி சுந்தரேசனும் வெற்றி பெறறனர்.

    சின்ன மாட்டுவண்டி பந்தயத்தில் முதலாவது மட்டங்கிப்பட்டி காவியா, இரண்டாவது கல்லல் உடையப்பா சக்தி அம்பலம், மூன்றாவது கே.கே.பட்டி  சிவா மாட்டு வண்டிகள் வெற்றிபெற்றன. வெற்றி பெற்ற மாடுகளுக்கு வேட்டி-துண்டு மாலை செலுத்தி ரொக்கப் பரிசும் மற்றும் முதலாவது வந்த மாடுகளுக்கு சேவலும் பரிசாக வழங்கினர். இந்த பந்தயத்தை  சாலையின் இருபுறங்களிலும்   ஆயிரக்கணக்கான மக்கள் கண்டுகளித்தனர்.
    Next Story
    ×