என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையில் தேங்கியுள்ள கழிவு நீர்
    X
    சாலையில் தேங்கியுள்ள கழிவு நீர்

    குடியிருப்பு பகுதியில் குளம் போல் தேங்கி நிற்கும் கழிவுநீர்

    சீர்காழி அருகே குடியிருப்பு பகுதியில் குளம் போல் தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது
    சீர்காழி:

    சீர்காழி ஒன்றியம் விளந்திடசமுத்திரம் ஊராட்சி ஜெயேந்திரர்நகர் உள்ளது.சிதம்பரம் செல்லும் பிரதான சாலை அருகேயுள்ள இந்த நகரில் பலகுடியிருப்புகள் உள்ளன.மேலும் இப்பகுதியை கடந்துதான் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் என அனைத்து தரப்பினரும் சென்று வருகின்றனர்.

    இப்பகுதியில் கடந்த சில வாரங்களாக கழிவுநீர் சாலையில் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனை கடந்துதான் மக்கள் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. கழிவுநீர் தேங்கிநிற்பதால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. 

    ஆகையால் மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீர் வெளியேற்றப்படுவதை தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×