என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கோவையில் நடத்தை சந்தேகத்தில் மனைவிக்கு அரிவாள் வெட்டு

    மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை வெட்டி கொலை செய்ய முயன்ற ராஜூவை தேடி வருகிறார்கள்.
    கோவை:

    கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள விநாயகர் நகரை சேர்ந்தவர் ராஜூ. கட்டிட தொழிலாளி. இவரது மனைவி பவித்ரா (வயது 23).

     இவர்களுக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை. இதற்காக பவித்ரா அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார்.

    ராஜூவுக்கு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. அவர் அவரது அக்கா கணவருடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகப்பட்டார். இதனால் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்று ராஜூ மது போதையில் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்த பவித்ரா தனது அக்காவிடம் செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். இதனை பார்த்த ராஜூ அக்காவின் கணவருடன் தான் தனது மனைவி பேசிக்கொண்டு இருக்கிறார் என சந்தேகப்பட்டார். 

    இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜூ வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தனது மனைவியின் தலை, முதுகு , கை ஆகிய பகுதிகளில் வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் கீழே சரிந்தார். இதனை பார்த்த ராஜூ அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய பவித்ராவை அக்கம் பக்கத்தனர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை வெட்டி கொலை செய்ய முயன்ற ராஜூவை தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×