என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
கோவை ரெயில் நிலையத்தில் முதியவர் சுருண்டு விழுந்து சாவு
ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் நடந்து வந்த 70 வயது முதியவர் திடீரென மயங்கி விழந்தார்.
கோவை:
கோவை ரெயில் நிலையம் 3-வது பிளாட்பாரத்தில் 70 வயது மதிக்கதக்க முதியவர் ஒருவர் நடந்து வந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி விழந்தார்.
இதைகண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் தகவல் அறிந்து விரைந்து வந்த ரெயிவே போலீசார் பயணிகள் உதவியுடன் முதியவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
ஆனால் அங்கு அந்த முதியவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து இறந்த முதியவர் யார்? எந்த ஊரை ? சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகின்றார்.
Next Story






