என் மலர்
உள்ளூர் செய்திகள்

நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்ட காட்சி.
ராயக்கோட்டை அருகே நலத்திட்ட உதவிகள் வழங்கல்
ராயக்கோட்டை அருகே நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை உள்வட்டம் பிள்ளாரி அக்ரகாரம் தரப்பு சஜ்ஜலப்பட்டி கிராமத்தில் நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது.
முகாமில் உதவி ஆணையர் பாலகுரு கலந்து க்கொண்டு 17 பேருக்கு குடும்ப அட்டை, 8 பேருக்கு பட்டா, 3 பேருக்கு முதியோர் உதவிதொகை, தோட்டகலைத்துறை மூலம் 3 பேருக்கு சொட்டுநீர்பாசனம் கருவிகள் உட்பட ரூ6. லட்சத்து 98 ஆயிரம் மதிப்பிலான நல திட்ட உதவிகளை வழங்கினார்.
தேன்னிக்கோட்டை வட்டாச்சியர் குருநாதன் அனைவரையும் வரவேற்று பேசினார். முகாமில் 60க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு மேல்நடவடிக்கைகாக சம்மந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் முனியப்பன், வட்ட வழங்கள் அலுவலர் சக்திவேல், மண்டல துணை வட்டாச்சியர் மதன்ராஜ், வருவாய் ஆய்வாளர் கருணாகரன் உட்பட அரசு துறை அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து க்கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கிராம நிர்வாக அதிகாரி வெங்கடாசலம் செய்திருந்தார்.
Next Story






