search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விநாயகர் கோவில் உண்டியலை தூக்கி சென்ற கொள்ளையர்கள்
    X
    விநாயகர் கோவில் உண்டியலை தூக்கி சென்ற கொள்ளையர்கள்

    திட்டக்குடியில் விநாயகர் கோவில் உண்டியலை தூக்கி சென்ற கொள்ளையர்கள்

    திட்டக்குடி அருகே விநாயகர் கோவில் உண்டியலை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    திட்டக்குடி:

    திட்டக்குடி தெற்கு தெருவில் உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் அப்பகுதியில் மிக பிரபலமானது. இந்தக் கோவிலில் கடந்த ஒரு வாரம் முன்பு அன்னப்படையல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் மூலம் கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியலில் ஏராளமான பக்தர்கள் பணம் செலுத்தி இருந்தனர்.

    இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கோவிலுக்கு வந்தனர். கோவில் கேட்டின் பூட்டுகளை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் கோவிலில் இருந்த உண்டியலை மர்ம நபர்கள் எடுத்து சென்று உள்ளனர்.

    இன்று காலை பூசாரி கோவிலுக்கு வந்தார். அப்போது கேட் உடைக்கப்பட்டு உண்டியல் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து திட்டக்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து உண்டியல் கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×