என் மலர்
உள்ளூர் செய்திகள்

விஷம்
திட்டக்குடி அருகே விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே குடும்ப தகராறு காரணமாக இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திட்டக்குடி:
திட்டக்குடி அருகே அருந்ததியர் தெரு, ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி. அவரது மனைவி ஜெயசக்தி (வயது30). கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை ஜெயசக்தி வீட்டிலிருந்த விஷத்தை எடுத்து குடித்து தற்கொலை செய்தார்.
தகவல்அறிந்த ராமநத்தம் போலீசார் அங்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இவர்களுக்கு திருமணமாகி 9 வருடங்கள் ஆகிறது. 2 மகன்கள் உள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ராமநத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திட்டக்குடி அருகே அருந்ததியர் தெரு, ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி. அவரது மனைவி ஜெயசக்தி (வயது30). கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை ஜெயசக்தி வீட்டிலிருந்த விஷத்தை எடுத்து குடித்து தற்கொலை செய்தார்.
தகவல்அறிந்த ராமநத்தம் போலீசார் அங்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இவர்களுக்கு திருமணமாகி 9 வருடங்கள் ஆகிறது. 2 மகன்கள் உள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ராமநத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story






