search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க. ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நிவேதா முருகன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.
    X
    தி.மு.க. ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நிவேதா முருகன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.

    தி.மு.க. ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் - முன்னாள் அமைச்சர் பங்கேற்பு

    மயிலாடுதுறையில் நடந்த தி.மு.க.வின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் பங்கேற்றார்.
    தரங்கம்பாடி:

    தி.மு.க அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் மயிலாடுதுறை அருகே பட்டமங்களம் ஊராட்சி சீனிவாசபுரத்தில் நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளரும், பூம்புகார் எம்.எல்.ஏ.வுமான நிவேதா முருகன் தலைமை தாங்கினார். வடக்கு ஒன்றிய செயலாளர் இளையபெருமாள், நகர மன்ற தலைவர் செல்வராஜ் ஒன்றிய குழு தலைவர் காமாட்சி மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெற்கு ஒன்றிய செயலாளர் ஞானஇராம நாதன் வரவேற்றார்.

    கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், தி.மு.க உயர்நிலை செயல் திட்ட குழு உறுப்பினருமான பொன். முத்துராமலிங்கம் மற்றும் தலைமை கழக பேச்சாளர் துறையூர்.துரைபாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர்.

    இதில் முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம் பேசுகையில் கூறியதாவது, கடந்த அ.தி.மு.க ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் அனைத்தும் தங்கமணி முதல் எடப்பாடி வரை கொண்டு சேர்க்கப்பட்டது. தி.மு.க ஆட்சியில் யாருக்காக திட்டம் உருவாக்கப்பட்டதோ அவர்களிடம் அந்த திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு போய் சேர்த்துள்ளார். 

    பாஜகவின் அண்ணாமலை பொய் மான் கரடி. வெகுசீக்கிரம் அது நிறுபனம் ஆகும். மத்திய அரசின் பல்வேறு நெருக்கடியிலும் தமிழக முதல்வர் தந்திரமாக ஆட்சி சக்கரத்தை சுழற்றிக் கொண்டு இருக்கிறார் என கூறினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ரவி, துணைச் செயலாளர் ஞானவேலன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட அமைப்பாளர் பி.எம். ஸ்ரீதர், முன்னாள் எம்.எல்.ஏ. க்கள், கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் மலர்விழி திருமாவளவன், மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் சாந்தி ராமலிங்கம், துணை அமைப்பாளர் டெய்சி, செம்பனார்கோவில் ஒன்றிய குழு துணை தலைவர் மைனர் பாஸ்கர், ஒன்றிய கவுன்சிலர் காளியம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவரும், பட்டமங்களம் ஊராட்சி மன்ற தலைவருமான செல்வமணி நன்றி கூறினார்.

    Next Story
    ×