search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாம்பு கடித்து இறந்த மல்லிகா
    X
    பாம்பு கடித்து இறந்த மல்லிகா

    பாம்பு கடித்து பெண் சாவு

    நாகை அருகே வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த பெண் பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் காரையூர் பகுதியை சேர்ந்தவர்கள் தியாகராஜன் - மல்லிகா தம்பதியினர். கணவன்- மனைவி இருவரும் நேற்று இரவு வீட்டு வாசலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென அங்கு வந்த நல்ல பாம்பு ஒன்று மல்லிகாவை கடித்துள்ளது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த தியாகராஜன் வலியால் துடித்த மல்லி காவை திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு மல்லிகாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த திருக்கண்ணபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×