என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பெரம்பலூரில் ரூ. 1 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணி
Byமாலை மலர்18 May 2022 8:40 AM GMT (Updated: 18 May 2022 8:40 AM GMT)
பெரம்பலூரில் ரூ. 1கோடியே 10 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் சாலை பணியை தலைமை பொறியாளர் சந்திரசேகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகு மூலம் பல்வேறு சாலை பணிகள் மற்றும் பாலங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதில் இந்த ஆண்டு பெரம்பலூர் பாலக்கரை முதல் துறைமங்கலம் வரையிலான சாலை ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ1 கோடியே 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இப்பணியினை நெடுஞ்சாலை துறை தலைமை பொறியாளர் சந்திரசேகர் நேரில் பார்வையிட்டு பணியின் தரத்தினை ஆய்வு செய்தார்.
அப்போது பணியினை தரமாகவும், விரைவாகவும் செய்து முடித்து பயன்பாட்டு விட வேண்டும் என அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது விழுப்புரம் வட்ட கண்காணிப்பு பொறியாளர் சத்தியபிரகாஷ் பெரம்பலூர் கோட்ட பொறியாளர் உத்தாண்டி, உதவி கோட்ட பொறியாளர் மாயவேல்,
உதவி பொறியாளர் ஆறுமுகம் மற்றும் கட்டுப்பாட்டு பொறியாளர்கள் சீனிவாசன், செல்வராஜ் மற்றும் கணபதி ஆகியோர் உடனிருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X