search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லூாரி மாணவிகள், மாயம்,
    X
    கல்லூாரி மாணவிகள், மாயம்,

    கல்லூரி மாணவிகள் திடீர் மாயம்

    விருதுநகர் பகுதியில் கல்லூாரி மாணவிகள் மாயமானார்கள்.
    விருதுநகர்

    விருதுநகர் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் ஒரு தனியார் கல்லூரி விடுதியில் தங்கி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் வெளியில் சென்ற மாணவி பின்னர் விடுதிக்குத் திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை.

    இதுபற்றி முருகன் வச்சகாரபட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அடுத்த அச்சம் பட்டியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகள் அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.நேற்று அவர் மாயமாகி விட்டார்‌.அவரை பல இடங்களில் தேடியும் எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை. இதுபற்றி மணிகண்டன் காரியாபட்டி போலீசில் புகார் செய்தார் .அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×