என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
வேலூர் அருகே கிணற்றில் பெண் பிணம் மீட்பு
வேலூர் அருகே கிணற்றில் பெண் பிணம் மீட்கப்பட்டது.
வேலூர்:
வேலூர் அருகே உள்ள கட்டுப்படி கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிணமாக மிதந்தார்.
இதனை கண்ட பொதுமக்கள் வேலூர் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிணமாக மீட்கப்பட்ட பெண் யார் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் பெண் யாராவது மாயமாகி உள்ளார்களா? பெண் சாவுக்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






