என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
லாரிகளை அடித்து நொறுக்கிய 2 பேர் கைது
லாரிகளை அடித்து நொறுக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் சீகம்பட்டியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 32). இவர் தனது லாரியை சந்தையில் நிறுத்திவைத்திருந்தார்.
அப்போது அவ்வழியாக வந்த 2 பேர் நாகராஜனுடன் தகராறில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரமடைந்த அந்த 2 பேரும் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரிகளின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.
இச்சபம்வம் தொடர்பாக வந்த புகாரின் பேரில் டவுன்போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தப்பேட்டையை சேர்ந்த ஆனந்த்(21), மேலஐந்தாம் வீதியை சேர்ந்த நவீன் (21) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






