என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கோத்தகிரியில் விபத்தில் கூலி தொழிலாளி பலி

    மோட்டார் சைக்கிளில் இருந்த 2 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினர்.
    அரவேணு:

    நீலகிரி மாவட்டம் கரிக்கையூர் கிராமத்தை சேர்ந்தவர் தாசன்(21). இவரது சகோதரர் கார்த்திக் ராஜா(வயது19). 2 பேரும் கூலி வேலை செய்து வருகின்றனர்.

    சகோதரர்கள் 2 பேரும் நேற்று அருகே உள்ள கடசோலை கிராமத்தில் வசிக்கும் தங்களது அத்தை வீட்டுக்கு செல்ல முடிவு செய்தனர். அதன்படி தங்களது மோட்டார் சைக்கிளில் 2 பேரும் கடசோலை சென்றனர். அங்கு உறவினர்களை பார்த்து விட்டு மீண்டும் கரிக்கையூர் நோக்கி வந்தனர்.
    மோட்டார் சைக்கிளை கார்த்திக் ராஜா ஓட்டினார். பின்னால் தாசன் அமர்ந்திருந்தார்.  மோட்டார் சைக்கிள் நஞ்சப்கவுடர் வளைவு என்னும் பகுதியில்  வந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த 2 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினர். இதில் தாசன் சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார். கார்த்திக் ராஜா பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினர்.

    இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, கார்த்திக் ராஜாவை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் இறந்த தாசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

    இதுகுறித்து சோலூர்மட்டம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    Next Story
    ×