என் மலர்
உள்ளூர் செய்திகள்

உர கடைகளில் ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள்.
உர கடையில் அதிகாரிகள் ஆய்வு
சீர்காழி பகுதியில் உள்ள உர கடையில் வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சீர்காழி:
சீர்காழி வட்டாரத்தில் உள்ள சில்லரை உர விற்பனை கடைகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கடுப்பாடு) சிவவீரபாண்டியன், சீர்காழி வேளாண்மை உதவி இயக்குநர் ராஜராஜன் ஆகியோர் ஆய்வு மேற்கொ ண்டனர்.
ஆய்வில் உரங்கள் இருப்பு, விற்பனை முனைய கருவியில் உள்ள இருப்பு, உர இருப்பு பதிவேடு ஆகிய மூன்றும் சரியாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்தனர்.
நடப்பு குறுவைக்கு தேவையான உரங்கள் போதுமான அளவு இருப்பு வைக்க அறிவறுத்தினார்கள். யூரியா அதிகமாக வாங்கிய 20 விவசாயிகள் விபரம் ஆய்வு செய்யப்பட்டது.
ஒரு விவசாயிக்கு அவருடைய நில உடைமைக்கு தேவையான உரங்கள் மட்டும் விற்க வேண்டும், யூரியா தனி ஒருவருக்கு அதிகம் விற்க கூடாது. அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் விற்க கூடாது. உரங்களுடன் சேர்த்து இணை பொருட்கள் கட்டாயப்படுத்தி விற்க கூடாது. விற்பனை உரிமம் அனைவரது பார்வையில் படும்படி வைக்க வேண்டும்.
உரங்கள் விலைப்பட்டி யல் விபரம் கடையில் வைக்க வேண்டும். இதில் விதிமீறல்கள் காண ப்பட்டால் உரக்கடு ப்பாடு விதிகள் 1985-ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்தனர்.
Next Story






