என் மலர்
உள்ளூர் செய்திகள்

கலசப்பாக்கம் அருகே விவசாயிகள் நெல் மூட்டையுடன் சாலை மறியலில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் மறியல்
கொள்முதல் நிலையத்தில் எடை போடாததால் நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை:
கலசப்பாக்கம் அருகே கலசபாக்கம் அடுத்த ்மோட்டூர் பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது.
இங்கு பதிவு செய்யப்பட்ட நெல் மூட்டைகளை எடை போடாமல் தாமதப்படுத்தி வருவதாக நெல் மூட்டைகளை சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த கலசபக்கம் போலீசார் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது நேரடி நெல் கொள்முதல் நிலைய அலுவலர் கூறுகையில் கலசப்பாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட விவசாயிகள் அதிகமானோர் பதிவு செய்து உள்ள காரணத்தால் அவர்களுக்கு முன்னுரிமை அளித்து நெல் மூட்டைகளை எடை போட்டு வருகின்றன. போளூரை சேர்ந்த விவசாயிகள் இங்கு வந்து பதிவு செய்து உள்ள காரணத்தால் எடை போடுவது தாமதம் ஏற்படுவதாக தெரிவித்தனர்.
பின்னர் அ–திகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி போளூர் பகுதி விவசாயிகளின்நெல் மூட்டைகளையும் எடைபோட சம்மதித்தனர். அதன்பின்னர் சாலைமறியல் கைவிடப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Next Story






