search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய அலுவலகக் கட்டிடம் கட்டுவதற்கான இடத்தை துணை சபாநாயகர் பிச்சாண்டி ஆய்வு செய்தபோது எடுத்தப்படம்.
    X
    புதிய அலுவலகக் கட்டிடம் கட்டுவதற்கான இடத்தை துணை சபாநாயகர் பிச்சாண்டி ஆய்வு செய்தபோது எடுத்தப்படம்.

    துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.4 கோடியில் புதிய கட்டிடம் கட்ட இடம் தேர்வு

    துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் புதிய கட்டிடம் கட்ட தேர்வுசெய்யப்பட்ட இடத்தை பிச்சாண்டி, எம்.பி, எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
    திருவண்ணாமலை:

    துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய புதியஅலுவலக கட்டிடம் கட்ட ரூ 4 கோடி மதிப்பீட்டில் இடம் தேர்வு செய்யும் பணி நடந்தது. இதில் துணை சபாநாயகர் பிச்சாண்டி, எம்.பி., எம்.எல். ஏ ஆகியோர் இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் தற்போது உள்ள இக்கட்டிடம் சுமார் 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ள காரணத்தால் இக்கட்டிடம் மிகவும் பழுதடைந்து உள்ளன. 

    இதனால் தற்போது ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதியிலிருந்து ரூபாய் 4 கோடி மதிப்பீட்டில் 2 மாடி உடன் கூடிய புதிய அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நேற்று துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றன. 

    இதில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி எம்.பி அண்ணாதுரை, கலசப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ தி.சரவணன் ஆகியோர் நேரில் வந்து புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டுவதற்கான இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

    அப்போது ஒன்றியக்குழு தலைவர் தமயந்திஏழுமலை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, விஜயலட்சுமி, மாவட்ட ஊராட்சி குழு துணைத்த லைவர் பாரதிராமஜெயம், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் அண்ணாமலை, ஒன்றிய உதவி பொறியா ளர்கள் தனவந்தன், அருணா மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.
    Next Story
    ×