என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
காவலாளி மயங்கி விழுந்து சாவு
ஈரோட்டில் காவலாளி மயங்கி விழுந்து சாவு குறித்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோட்டில் காவலாளி மயங்கி விழுந்து சாவு குறித்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மோகன் தோட்டம் அடுத்த கோணவாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (55).இவரது மனைவி பேபி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
விஸ்வநாதன் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். அதே அடுக்குமாடி குடியிருப்பில் அவரது மனைவி வீட்டு வேலை பார்த்து வந்தார். இவர்களது மகளுக்கு திருமணமாகி கணவருடன் சாஸ்திரி நகரில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் விஸ்வநாதனுக்கு கடந்த 2 வருடமாக உடல்நிலை சரியில்லாததால் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்தார். மேலும் அவருக்கு குடி பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று பேபி கொடுமுடியில் உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்று விட்டார். வீட்டிலிருந்த விஸ்வநாதன் ஈரோடு ஸ்டோனி பாலம் அருகே திடீரென மயங்கி கீழே விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
இதுகுறித்த தகவல் பேபிக்கு தெரிவிக்கப்பட்டது. அவரை பரிசோதித்த டாக்டர்கள் விஸ்வநாதன் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






