என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
கோவில் உண்டியல் உடைத்து பணம் திருடிய வாலிபர் கைது
ஈரோட்டில் கோவில் உண்டியல் உடைத்து பணம் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஈரோடு:
ஈரோட்டில் கோவில் உண்டியல் உடைத்து பணம் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஈரோடு வண்டியூரான் கோவில் வீதி எம்.ஜி.ஆர்.நகரில் கருமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் உண்டியல் கடந்த ஏப்ரல் மாதம் 27-ந் தேதி உடைக்கப்பட்டு பணம் திருட்டு போனது. இது தொடர்பாக கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் கருமாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடியதாக ஈரோடு கருங்கல்பாளையம் ஜானகி அம்மாள் லே-அவுட் பகுதியை சேர்ந்த பாலா என்கிற இப்ராஹிம் (27) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. இப்ராஹிம் மீது 2 கொலை வழக்குகள், வீட்டுக்குள் புகுந்து திருட முயற்சி செய்தது உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் 8-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது. இதையடுத்து இப்ராஹிம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
Next Story






