என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை: போக்சோவில் கட்டிட மேஸ்திரி கைது

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே 17 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த கட்டிட மேஸ்திரியை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
    ஓசூர், 

    ஓசூர் அருகே பாகலூரை சேர்ந்தவர் மது (வயது26). கட்டிட மேஸ்திரி கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை கடத்திச்சென்றதாக கூறப்படுகிறது. 
    சிறுமியை காணாத அவரது பெற்றோர் இதுகுறித்து பாகலூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சிறுமியை தீவிரமாக தேடினர். 

    அப்போது சிறுமி கர்நாடக மாநிலம் சர்ஜாபுரம் பகுதியில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. பாகலூர் போலீசார் சர்ஜாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்து சிறுமியை மீட்டனர். 

    சிறுமி அளித்த தகவலில் அடிப்படையில் அவரை கடத்தி சென்ற மதுவை பாகலூர் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக ஒப்புகொண்டார். 

    இதை தொடர்ந்து வழக்கு ஓசூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த மதுவை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×