என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
ஊத்தங்கரை அருகே கல்லூரிக்கு சென்ற மாணவர் மாயம்
ஊத்தங்கரை அருகே கல்லூரிக்கு சென்ற மாணவன் மாயமானார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்துள்ள எலுப்பகுட்டப்பட்டி பகுதியை சேர்ந்தவர் திருவெங்கடம். இவரது மகன் சதீஸ் (வயது19). இவர் தருமபுரி மாவட்டம், அரூர் அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி அன்று சதீஸ் வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்றார். பின்னர் மாலையில் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து ஊத்தங்கரை போலீசில் புகார் கொடுக்க ப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






