என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
வாகன விபத்தில் 7 பேர் மருத்துவமனையில் அனுமதி
வாகன விபத்தில் காயங்களுடன் 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் காரைக்குடி கோட்டையூர் டெலிபோன் காலனியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது40). இவரது மனைவி சங்கீதா(33), மகள் நிகீதா (9), இவர்கள் மூன்று பேரும் ஒரு காரில் காரைக்குடியில் இருந்து தஞ்சாவூருக்கு சென்று கொண்டிருந்தனர்.
இவரது காருக்கு முன்னாள் பெருமாநாடு பகுதியை சேர்ந்த சுப்பையா (52), அவரது உறவினர் மலையாண்டி மனைவி செல்வி (42) ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
தஞ்சை புதுக்கோட்டை சாலையில் வந்து கொண்டிருந்த போது திடீரென சுப்பையா தனது இருசக்கர வாகனத்தை திருப்பியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சுரேஷ்குமார் ஓட்டிவந்த கார் இவர்கள் மீது மோதியது.
இதில் அந்த வழியாக மணிவேல் என்பவர் ஓட்டிவந்த காரும், சுரேஷ்குமார் கார் மீது மோதியது. இதில் சுரேஷ்குமார், சங்கீதா, நிகீதா, சுப்பையா, செல்வி மற்றும் மணிவேல், அவரது காரில் வந்த சுகன்யா ஆகிய 7 பேரும் காயமடைந்தனர்.
அவர்களை அவ்வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் குறித்து சம்பட்டி விடுதி போலீசார் வழக்குப் பதிவு செயய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






