என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தில்லைக்காளியை தவறாக சித்தரித்து வீடியோ வெளியீடு - இந்து மகாசபா அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்15 May 2022 9:59 AM GMT (Updated: 15 May 2022 9:59 AM GMT)
தில்லைக்காளியை தவறாக சித்தரித்து வீடியோ வெளியிட்டதை கண்டித்து மயிலாடுதுறையில் இந்து மகாசபா அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தரங்கம்பாடி:
சிதம்பரம் நடராஜர், தில்லைக் காளியை தவறாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட யுடியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மயிலாடுதுறையில் அகில பாரத இந்து மகாசபா அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்து மகா சபா ஆலய பாதுகாப்புப் பிரிவு மாநில தலைவர் ராமநிரஞ்சன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சிதம்பரம் நடராஜர், தில்லைக் காளியை தவறாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட யு 2 புரூட்டஸ் யுடியூப் சேனலை தடை செய்ய வேண்டும்.
அதன் தொகுப்பாளர் மைனர் விஜய் என்பவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி அகில பாரத இந்து மகா சபா அமைப்பினர் ஒற்றைக் காலில் நின்று சங்கு ஊதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, இந்து மகா சபா ஆலய பாதுகாப்புப் பிரிவு மாவட்ட தலைவர் சுதாகர், மாவட்ட செயலாளர் ராஜ்குமார், பி.ஜே.பி. ஒன்றிய செயலாளர் சுந்தரவடிவேலு, ஒன்றிய பொதுச் செயலாளர் தீபம் ராஜ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X