என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வயிற்று வலி குணமாகததால் தீக்குளித்து பெண் தற்கொலை
Byமாலை மலர்15 May 2022 9:53 AM GMT (Updated: 15 May 2022 9:53 AM GMT)
கோவிலுக்கு சென்று நேர்த்திக் கடன் செலுத்தியும் வயிற்று வலி குணமாகததால் விரக்தியில் தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு:
கோவிலுக்கு சென்று நேர்த்திக் கடன் செலுத்தியும் வயிற்று வலி குணமாகததால் விரக்தியில் தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு மாவட்டம் சதுமுகை பள்ளிகூட தோட்டம் பகுதியை சேந்தவர் பழனிசாமி. விவசாயி. இவரது மனைவி ராஜம்மாள் (50). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் ராஜம்மாளுக்கு கடந்த 6 மாதமாக வயிற்று வலி ஏற்பட்டு வந்தது. இதனால் ராஜம்மாள் மருத்து வமனைக்கு செல்லாமல் கோவிலுக்கு சென்று வயிறு வலி சரியாக பல நேர்த்திக்கடன்களை செய்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்ட ராஜம்மாள், வீட்டின் மேல் தளத்திற்கு சென்று, தனக்கு தானே தீ வைத்து தற்கொலைக்கு முயன்றார்.
இதில், ராஜம்மாளின் அலறல் சத்தம் கேட்டு அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனு மதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜம்மாள் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X