என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப் படம்
வேலூர் அருகே நடுரோட்டில் கார் திடீர் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
வேலூர் அருகே நடுரோட்டில் கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர்,
தீப்பிடித்த கார் வேலூர் அருகே அமிர்தியில் சிறுவன உயிரின பூங்கா உள்ளது. இங்கு மான்கள், முதலை, பறவை இனங்கள் போன்றவை உள்ளது. இயற்கை சூழலுடன் அமைந்துள்ள இந்த பூங்காவுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் வேலூர் விருதம்பட்டை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 35). இவர் ஆஸ்திரேலியா நாட்டில் டாக்டராக பணியாற்றி வருகிறார். விடுமுறையில் ஊருக்கு வந்த அவர் அமிர்திக்கு நேற்று சென்று விட்டு மாலையில் நண்பருடன் வீடு திரும்பினார்.
வேடக்கொல்லைமேடு அருகே வந்து கொண்டிருந்தபோது கார் திடீரென தீப்பிடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் காரை அங்கேயே நிறுத்திவிட்டு இருவரும் வெளியே தப்பி ஓடினர். சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீ பற்றிக்கொண்டு கருகியது. கார் மளமளவென எரிந்து கொண்டிருந்தபோது மழை பெய்தது.
போக்குவரத்து பாதிப்பு இதனிடையே தகவல் அறிந்ததும் வேலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்போது காரின் உட்பகுதியில் இருந்து புகை வந்ததால் அதை அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த விபத்தில் இருவருக்கும் எந்த காயமும் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதுகுறித்து தீயணைப்பு வீரர்கள் கூறுகையில், காரில் இருந்த ஏ.சி.யில் மின்விசிறி திடீரென ஓடாமல் இருந்தது. இதனால் அதிக மின் அழுத்தம் ஏற்பட்டு தீபிடித்துள்ளது என்றனர்.
தீ விபத்து ஏற்பட்டபோது அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story






