என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
சூளகிரி பகுதியில் மழை: 70 டன் வெங்காயம் அழுகி நாசம்
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் பெய்து வரும் மழையால் 70 டன் வெங்காயம் அழுகி நாசமானது.
சூளகிரி,
சூளகிரி சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் சிவப்பு வெங்காயம் சாகுபடி செய்து வருகிறார்கள். இதற்கு வெளி நாடுகளில் வரவேற்பு உள்ளது. அறுவடை செய்த வெங்காயத்தை சென்னை, பெங்களூருவுக்கு அனுப்பி வைத்து அங்கிருந்து வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் ஆர்டர்கள் வரவில்லை. இதனால் சுமார் 70 டன் வெங்காயத்தை விவசாயிகள் பட்டியடித்து இருப்பில் வைத்திருந்தனர்.
மேலும் பாதுகாப்புக்காக தார்பாய் போட்டு வைத்திருந்தனர். இந்த நிலையில் சூளகிரி பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
இந்த மழைக்கு வெங்காயம் அழுகி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
Next Story






