என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஆற்றில் மூழ்கி சிறுமி, சிறுவன் சாவு

    செங்கம் அருகே ஆற்றில் மூழ்கி சிறுமி, சிறுவன் பரிதாபமாக இறந்தனர்.
    செங்கம், 

    செங்கம் அருகே உள்ள பரமனந்தல் தீபம் நகரைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவருடைய மகள் கீர்த்தனா (வயது 11) மற்றும் அவர்களது உறவினர் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவருடைய மகன் விஷ்ணு (11) இவர்கள் 2 பேரும் வீட்டின் அருகே உள்ள செய்யாற்றில் குளிப்பதற்காக சென்றனர். 

    2 பேர் சாவு இந்நிலையில் ஆற்றில் இறங்கி குளிக்கும்போது ஆழம் அதிகம் உள்ள பகுதியில் சிக்கிக்கொண்டனர். இதில் தண்ணீரில் மூழ்கி கீர்த்தனாவும், விஷ்ணுவும் பரிதாபமாக இறந்தனர். 

    இறந்த சிறுவர்களின் உடலையும் பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

    இதுகுறித்து செங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    கோடை விடுமுறை அறிவித்துள்ள சூழலில் குழந்தைகள் ஆற்றில் குளிக்கச் சென்றபோது உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×