என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீட்க்கப்பட்ட ஆண் சடலம்
    X
    மீட்க்கப்பட்ட ஆண் சடலம்

    தளி அருகே மாந்தோப்பில் ஆண் பிணம் மீட்பு போலீசார் விசாரணை

    கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே மாந்தோப்பில் பிணமாக கிடந்தவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் தளி அருகே பேலாளம் செல்லும் சாலையில் உள்ள முகமது இஸ்மாயில் என்பவரது மாந்தோப்பில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக பொதுமக்கள் தளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

    இதுபற்றி தகவலறிந்த இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் மாந்தோப்புக்கு சென்றனர். அவர் இறந்து கிடந்தவர்  நீல கலரில் சட்டையும், கருப்பு நிற பேண்டும் அணிந்திருந்தார்.  அருகில் பூச்சிக்கொல்லி மருந்தும் இருந்ததும் தெரியவந்தது.

     போலீசார்அங்கிருந்த பொது மக்களிடம் விசாரணை செய்ததில் இவர் யார் என்று தெரியவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர். இதனால் இறந்தவர் யார்?எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை.

    இதையடுத்து சடலத்தை மீட்ட போலீசார் ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குளிர்சாதன கிடங்கில் பிணண் வைக்கப்பட்டுள்ளது. இறந்தவர் குறித்து  தளி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×