என் மலர்
உள்ளூர் செய்திகள்

செவிலியர்களை பாராட்டி பிம்ஸ் நிர்வாக குழு முதன்மை ஆலோசகர் பாபு டேனியல் பரிசளித்தார்.
செவிலியர் தினவிழா
பிம்ஸ் மருத்துவமனையில் செவிலியர் தினவிழா கொண்டாடப்பட்டது.
புதுச்சேரி:
பிம்ஸ் மருத்துவமனையில் செவிலியர் தினவிழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் ரேணு தலைமை தாங்கினார். மருத்துவமனை நிர்வாக குழு முதன்மை ஆலோசகர் பாபு டேனியல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசும் போது கூறியதாவது:-
“கொேரானா காலத்தில் செவிலியர்கள் பங்கு பாராட்டுக்குரியது. மேலும் மருத்துவமனையில் மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்கும் இணைப்பு பாலமாக இருந்து அதிக நேரம் செலவிட்டு அவர்கள் சிகிச்சைக்கு பக்கபலமாய் இருக்கும் செவிலியர்களை பாராட்டுகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர், செவிலியர்கள் பங்கு பெற்ற நடனம்- பாடல் போட்டி கோலப் போட்டிகள் நடைபெற்றது. அதில் வெற்றி பெற்ற செவிலியர்களுக்கு பரிசளிக்கப்பட்டது.
விழாவில் பதிவாளர் அனில் பூர்த்தி, மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் சதீஷ் உள்பட மருத்துவ நிபுணர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பிம்ஸ் செவிலியர் துறையினர் செய்திருந்தனர்.
Next Story






