search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் தேரோட்டம்.
    X
    குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் தேரோட்டம்.

    குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் தேரோட்டம்

    குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழாவையொட்டி இன்று தேரோட்டம் நடந்தது.
    குடியாத்தம் :

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் திருவிழா மாநில அளவில் மிகவும் புகழ்பெற்றது.கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக தமிழக அரசு விதித்த கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து தேர் திருவிழாவும், கோவில் வளாகத்திலேயே அம்மன் சிரசு ஊர்வலமும் நடந்தது.

    கொரோனா கட்டுப்பாடுகள் நீங்கியதால் இந்த ஆண்டு தேர் திருவிழா மற்றும் கெங்கையம்மன் சிரசு திருவிழா நடத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இன்று காலை கெங்கையம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. 

    தேரோட்டத்தை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அலங்காரமும் சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து உற்சவருக்கு சிறப்பு அலங்காரமும் ஆராதனையும் செய்யப்பட்டு தேரில் எழுந்தருளினார். 

    தேர்த்திருவிழா தொடக்க நிகழ்ச்சியில் குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்செயன், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன், நகர மன்ற தலைவர் எஸ். சவுந்தரராசன், நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி, ஒன்றிய குழு தலைவர்என்.இ. சத்யானந்தம், தாசில்தார் லலிதா உள்ளிட்ட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். தேரோட்டம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வடம்பிடித்து செல்லப்பட்டது.

    நேர்த்திகடன் செலுத்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாவிளக்கு தீபம் ஏந்தி வந்தனர் தொடர்ந்து மிளகு உப்பு கோவில் மீது எறிந்தனர். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நேர்த்திக் கடனுக்காக தேரில் அம்மனிடம் வைத்து வழிபட்டனர்.பாதுகாப்பு ஏற்பாடுகளை வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டார்.

    கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுந்தரமூர்த்தி தலைமையில் குடியாத்தம் டி.எஸ்.பி. ராமமூர்த்தி உள்பட 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் லட்சுமணன், கோவில் நிர்வாக அதிகாரி திருநாவுக்கரசுஊர் நாட்டாமை ஆர்.ஜி.எஸ்.சம்பத், கவுரவ தர்மகர்த்தா கே.பிச்சாண்டி உள்பட விழாக்குழுவினர் இளைஞர் அணியினர் செய்து வருகின்றனர்.

    தேரோட்டம் மற்றும் கெங்கையம்மன் சிரசு திருவிழா முன்னிட்டு நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது பல இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு தண்ணீர்பந்தல் அன்னதானம் உள்ளிட்டவை  வழங்கினர்.

    தேர் செல்லும் பாதையில் உள்ள மின் கம்பிகளை அப்புறப்படுத்துவது பணிகளை குடியாத்தம் மின்சார வாரிய செயற் பொறியாளர் வெங்கடாஜலபதி தலைமையில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருவிழாவை முன்னிட்டு குடியாத்தம் நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு தலைமையில் குடியாத்தம் நகரில் முழு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
    Next Story
    ×