என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாலாறு அன்னை ரத யாத்திரைக்கு சக்தி அம்மா பூஜைகள் செய்த காட்சி.
வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் பாலாறு அன்னை ரத யாத்திரை
வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் பாலாறு அன்னை ரத யாத்திரையை சக்தி அம்மா தொடங்கி வைத்தார்.
வேலூர் :
வேலூரில் பாலாறு பெருவிழா அடுத்த மாதம் 5 நாட்கள் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு பாலாறு அன்னை ரத யாத்திரை தொடக்கவிழா வேலூர் தங்கக்கோவிலில் இன்று நடைபெற்றது.
சத்திஅம்மா தலைமை தாங்கி ரதத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து ஆரத்தி காண்பித்து தொடங்கி வைத்தார். இந்த ரதம் கர்நாடக மாநிலம் நந்தி துர்க்கம் மலைக்கு சென்று அங்கு தீர்த்தம் பெற்று அதைத் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டம் கனகநாச்சியம்மன் கோவிலுக்கு வருகிற 16-ந்தேதி வருகை தர உள்ளது.
பின்னர் அங்கிருந்து வாணியம்பாடி, ஆம்பூர், ஆற்காடு, காஞ்சிபுரம், வாலாஜாபாத், கடலூர் சின்ன குப்பத்தில் சென்று ரத யாத்திரை நிறைவு பெறுகிறது. பாலாறு செல்லும் இடங்களில் மொத்தம் 21 நாட்கள் ரதயாத்திரை நடைபெறுகிறது.
இந்த ரதயாத்திரை தொடக்க நிகழ்ச்சியில் தங்கக்கோவில் இயக்குனர் சுரேஷ்பாபு, நாராயணி பீட மேலாளர் சம்பத் மற்றும் கோரஷானந்தா சரஸ்வதி, மோகானந்த சரஸ்வதி மற்றும் பாலாறு பாதுகாப்பு அறக்கட்டளை நிர்வாகிகள், அகில பாரதீய சந்நியாசிகள் சங்கத்தினர், நாராயணி பீடம் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை அகில பாரதீய சந்நியாசிகள் சங்கமும், நாராயணி பீடமும் இணைந்து செய்திருந்தனர்.
Next Story






