என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மக்கள் தொண்டர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
    X
    மக்கள் தொண்டர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் தொண்டர் பயிற்சி முகாம்

    மயிலாடுதுறை மாவட்டக்குழு சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் தொண்டர் பயிற்சி முகாம் நடைபெற்றது.
    சீர்காழி:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலாடுதுறை மாவட்டக்குழு சார்பில் மக்கள் தொண்டர் பயிற்சி முகாம் சீர்காழியில் 3 தினங்கள் நடைபெற்றது.

    அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் மா பிரபாகரன் தலைமை வகித்தார். பயிற்சியாளர் ஆர்.சந்திரசேகர ஆசாத், மாநில பயிற்றுனர் பாபு, மாவட்ட பயிற்றுனர் மதனகோபால், முன்னிலை வகித்தனர். பயிற்சி முகாம் துவக்கி வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் வாழ்த்துரை வழங்கினார். வீரர்களுக்கு சான்றிதழ் எம்.செல்வராசு.எம்.பி. வழங்கி கவுரவித்தார்.

    நிர்வாகக் குழு வழக்கறிஞர் சு.சுந்தரய்யா, மாவட்ட குழு உறுப்பினர் இளைஞர்களை ஊக்குவித்து பாராட்டி பேசினார்.சீர்காழி ஒன்றிய செயலாளர் நீதிசோழன், கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் ஜெய்சக்திவேல், செம்பனார்கோவில் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய செயலாளர் குத்தாலம் அறிவழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×