என் மலர்
உள்ளூர் செய்திகள்

தற்கொலை
அளவுக்கு அதிகமாக மாத்திரை தின்று எலக்ட்ரீசியன் தற்கொலை
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே அளவுக்கு அதிகமாக மாத்திரை தின்று எலக்ட்ரீசியன் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வானூர்:
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே பொம்மையார் பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஹேமச்சந்திரன் (வயது 36). ஆரோவில் பகுதியில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்தார். அவரது மனைவி அருணா.
கடந்த சில நாட்களாக கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதுபற்றி அக்கம் பக்கம் உள்ளவர்கள் சமரசம் செய்தனர். இருந்தாலும் தொடர்ந்து பிரச்சினை நீடித்து வந்தது. நேற்று இரவும் தகராறு உறுவானது.
இதனால் மனமுடைந்த ஹேமச்சந்திரன் அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை தூக்கிகொண்டு புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஹேமச்சந்திரன் இறந்தார்.
இதுபற்றி கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே பொம்மையார் பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஹேமச்சந்திரன் (வயது 36). ஆரோவில் பகுதியில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்தார். அவரது மனைவி அருணா.
கடந்த சில நாட்களாக கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதுபற்றி அக்கம் பக்கம் உள்ளவர்கள் சமரசம் செய்தனர். இருந்தாலும் தொடர்ந்து பிரச்சினை நீடித்து வந்தது. நேற்று இரவும் தகராறு உறுவானது.
இதனால் மனமுடைந்த ஹேமச்சந்திரன் அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை தூக்கிகொண்டு புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஹேமச்சந்திரன் இறந்தார்.
இதுபற்றி கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






