என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
வேலூர் புதிய பஸ் நிலையத்தில் போதையில் உள்ளாடையுடன் சுற்றி தனியார் பஸ் டிரைவர் ரகளை
வேலூர் புதிய பஸ் நிலையத்தில் போதையில் உள்ளாடையுடன் சுற்றி தனியார் பஸ் டிரைவர் ரகளையில் ஈடுபட்டார்.
வேலூர்:
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் வேலூர் புதிய பேருந்து நிலையம் நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டு வருகின்றது.
கட்டுமானப் பணிகள் தொடங்கிய நாளிலிருந்து வெளியூர் பஸ்கள் அனைத்தும் பழைய பஸ் நிலையத்துக்குச் சென்றுதான் புறப்படுகின்றன. சென்னை, சோளிங்கர், அரக்கோணம், திருத்தணி மார்க்கமாக செல்லும் பஸ்கள் மட்டுமே புதிய பஸ் நிலையத்துக்கு வந்துச் செல்கின்றன.
இதனால், பயணிகள் நடமாட்டம் குறைவாக உள்ளது. ஆதரவற்ற பெண்கள் மற்றும் முதியவர்கள் சிலர் பஸ் நிலையத்தின் ஒருப்பகுதியிலுள்ள கோவிலின் பின்புறம் தங்கி உறங்குகிறார்கள்.
வெளிச்சம் குறைவாக இருப்பதால் போதை ஆசாமிகளும் அங்குச் சுற்றுகிறார்கள். இரவு நேரங்களில், போலீஸ் பஸ் நிலையத்துக்குள் ரோந்து வருவது கிடையாது.
இந்த நிலையில், வேலூரிலிருந்து சோளிங்கர் வழியாக திருத்தணி செல்லும் தனியார் பஸ் பஸ் நிலையத்திற்கு வந்தது. அந்த பஸ், இன்று அதிகாலை 2.30 மணிக்கு திருத்தணி புறப்பட தயாராக நிறுத்தப்பட்டிருந்தது.
இரவு ஓட்டி வந்த டிரைவர், மாற்று டிரைவரிடம் வண்டியை ஒப்படைத்துவிட்டு வீட்டுக்குப் புறப்படாமல், பஸ் நிலையத்துக்குள்ளேயே அமர்ந்து மது குடித்தார்.
பின்னர், சட்டை, பேண்ட்டை கழற்றி வைத்துவிட்டு உள்ளாடையுடன் பஸ் நிலையத்துக்குள் சுற்றினார். உள்ளாடையுடன் மதுபோதையில் பஸ் நிலையத்துக்குள் ஓவர் அலப்பறையில் ஈடுபட்டுகொண்டிருந்தார். இதனால், அங்கு தூங்கிக்கொண்டிருந்த ஆதரவற்ற பெண்களும், முதியவர்களும் அவதிக்குள்ளாகினர். சென்னை பஸ்சுக்காக காத்திருந்த பெண் பயணிகளும் முகச் சுளிப்புக்கு ஆளாகினர்.
பஸ் நிலையத்தில் போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட வேண்டும். ஆபாசமாக நடந்து கொள்ளும் இதுபோன்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






