என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீசார் அறிவுரை
    X
    போலீசார் அறிவுரை

    கோத்தகிரி மலைப்பாதையில் வளைவுகளில் வாகனங்களை கவனமுடன் இயக்க அறிவுரை

    அடிக்கடி நிலவும் விபத்துகளால் டிரைவர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கினர்
    அரவேணு,
    கோத்தகிரி மலைப்பாதை யில் பயணிக்கும் சுற்றுலா வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல்துறையினர் எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்க அறிவுறுத்தினர். 

    தற்போது கோடை சீசன் தொடங்கிய நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு உள் மற்றும் வெளி மாநில, மாவட்ட சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை புரிகின்றனர்.
     சமவெளிப் பகுதிகளில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு வரும் வாகனங்கள் பர்லியார், குன்னூர் வழியாக மாவட்டத்திற்கு வந்து கோத்தகிரி, குஞ்சப்பனை வழியாக சமவெளிப் பகுதிகளுக்கு செல்ல ஒரு வழிப் பாதையாக மாற்றம் செய்யப்பட்டு  உள்ளது.

    இந்தநிலையில்  கோத்தகிரி மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலை மலைப்பாதையில் கடந்த 2  வாரங்களில் நான்கு சுற்றுலா வாகனங்கள் விபத்திற்குள்ளான நிலை யில், மலைப்பாதையில் பயணிக்கும் சுற்றுலா வாகன ஓட்டிகளுக்கு மலைப்பாதையில் பயணிக்கும் போது போக்குவரத்து நெறி முறைகளை பின்பற்றிடவும், வாகனத்தை இரண்டாவது கியரில் இயக்கவும், மிகக்குறுகிய வளைவுகளில் ஒலி எழுப்பி வாகனத்தை குறிப்பிட்ட வேகத்தில் இயக்க கோத்தகிரி போக்குவரத்து ஆய்வாளர் சரவணனக்குமார் தலைமையிலான காவலர்கள் வாகன ஓட்டிகளுக்கு அறிவுரைகள் வழங்கினர்.

    மேலும் மலைப்பாதையில் பயணிக்கும் போது ஏதேனும் இடர்பாடுகள் ஏற்பட்டால்  உடனே காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

    Next Story
    ×