என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நஞ்சுகொண்டாபுரத்தில் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்
Byமாலை மலர்13 May 2022 9:32 AM GMT (Updated: 13 May 2022 9:32 AM GMT)
நஞ்சுகொண்டாபுரத்தில் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
வேலூர்:
வேலூர் மாவட்டம் கணியம்பாடி அடுத்த நஞ்சுகொண்டாபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ அபய ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி கடந்த 48 நாட்களாக யஜமானர் சங்கல்பம், பிராத்தனா சீக்தம் புண்யாஹம், அக்னி பிரதிஷ்டை, கோ பூஜை, ஹோமம் மகா பூர்ணாஹீதி உள்ளிட்ட பூஜைகள் ஆஞ்சநேயருக்கு செய்யப்பட்டது.
கும்பாபிஷேக விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சீதா தமிழ்செல்வன் தலைமை தாங்கினார்.
ஊர் பெரியதனம் மாணிக்கவேலு, துணை தலைவர் கன்னியப்பன், ஒன்றிய கவுன்சிலர் நதியாபுருஷோத்தமன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தருமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம நிர்வாக அலுவலர் ராம்ராஜ் வரவேற்றார்.
காலை 6 மணி முதல் 7 மணி அளவில் அபய ஆஞ்சநேயருக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ராதாகிருஷ்ணன், முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X