என் மலர்
உள்ளூர் செய்திகள்

கலசப்பாக்கம் பஜார் வீதியில் போடப்படும் தார் சாலையை கலெக்டர் முருகேஷ் பார்வையிட்டார்.
கலசப்பாக்கம் பஜார் வீதியில் ரூ.1.75 கோடியில் புதிதாக தார்சாலை அமைக்கும் பணியை கலெக்டர் ஆய்வு
கலசப்பாக்கம் பஜார் வீதியில் ரூ.1.75 கோடியில் புதிதாக தார்சாலை அமைக்கும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை:
கலசப்பாக்கம் பஜார் வீதியில் ரூ.1 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக போடப்பட்டு வரும் தார்சாலை பணியை கலெக்டர் முருகேஷ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கலசபாக்கத்தில் இருந்து பூண்டி செல்லும் சாலை அகலப்படுத்தி தார் சாலை போடும் பணி நடக்கிறது.
இதில் கலசப்பாக்கம் மெயின்ரோட்டில் இருந்து பஜார் வீதியில் செல்லும் போது அதிக அளவு ஆக்கிரமிப்பு உள்ளது.
இதனை சாலை போடுவதற்கு முன்பே அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டு சாலை பணி தொடங்கி இருக்க வேண்டும் மேலும் கல்வெட்டு கட்டப்பட்டு வரும் இடத்தில் கல்வெட்டின் நீளம் அகலம் பெரிதாகவும் கால்வாயின் அகலம் குறுகியும் உள்ளதை பார்வையிட்டு கால்வாயின் அகலம் குறித்து கேள்வி எழுப்பினார்.
அப்போது 9 மீட்டர் அகலம் கால்வாய் உள்ளது என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் ஒன்றை மீட்டர் அகலம் மட்டுமே இருந்தால் எப்படி தண்ணீர் செல்லும் எந்த பக்கத்தில் பார்த்தாலும் ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் உள்ளது. இன்னும் 2 நாட்களில் இந்த கால்வாயின் ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்றுங்கள் என்று வருவாய் துறைக்கு உத்தரவிட்டார்.
மேலும் சாலை போடும் பணி ஆக்கிரமிப்பை அகற்றி செய்ய வேண்டுமெனவும் பேசினார் பின்னர் கலசப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் பிரதாப் கோட்ட பொறியாளர் முரளி உட்பட அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Next Story






